2001
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து அதில் அ.தி.மு.க- வென்றதும், அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா முதல்வர் ஆனதும், பின்னர் பதவி விலகி ஒ.பன்னீர்செல்வம் பொம்மை முதல்வராக இருந்ததும், கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டதும் இந்த ஆண்டில்தான்
2002
ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு ஜெயித்து மீண்டும் முதல்வரானதும், பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதும், மதமாற்ற தடை சட்டம், வேலை நிறுத்த தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதும், மூப்பனார் மறைவிற்கு பின்னால் அவரது மகன் வாசனால் நடத்தப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ், மீண்டும் காங்கிரசில் இணைந்ததும் இந்த ஆண்டில்தான். 2003
தைரியம் மற்றும் சாகச செயல்களுக்காக கல்பனாசாவ்லா விருதை தமிழக அரசு அறிவித்ததும், இந்தியாவின் முதல் பெண்கள் கமாண்டர் படை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும், ஆறாவது தமிழ் இணைய மாநாடு சென்னையில் நடத்தப்பட்டதும் இந்த ஆண்டில்தான் 2004
கும்பகோணம் தீ விபத்து
ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் தீவிபத்து
வீரப்பன் கொலை
சங்கராச்சாரியார் கைது
சுனாமி
ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் தீவிபத்து ஏற்பட்டு 51 உயிர்கள் பலியானதும், கும்பகோணம் சரஸ்வதி வித்யாலயம் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு 90 குழந்தைகள் பலியானதும், சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக்கொல்ல பட்டதும், கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதும், உலகமெங்கும் சுனாமி எற்பட்டுலட்சக்கணக்கான உயிர்கள் மாண்டதும் இந்த ஆண்டில்தான்
2005
டாக்டரு விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்ததும், எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஞான பீட விருது வழங்கப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.
2006
சட்டப்பேரவை தேர்தல் நடந்து கலைஞர் மீண்டும் முதல்வரானது இந்த ஆண்டில்தான்.2007
பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உடல்ரீதியான தண்டனை வழங்க தமிழக அரசு தடைச்சட்டம் கொண்டு வந்ததும்,
ஈரோடு, திருப்பூர் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.
2008
தை முதல்நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததும், ரேசன் கடையில் ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்கும் வழக்கம் தொடங்கப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.
2009
தமிழக துணை முதல்வராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதும், கலைஞர் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டதும், இலங்கையில் போர் நிறுத்தம் கோரி, சாஸ்திரி பவனருகில் முத்துக்குமார் தீக்குளித்து இறந்ததும் இந்த ஆண்டில்தான்.
2010
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றதும், கலைஞருக்கு அதிக பாராட்டு விழா நடந்ததும், பதிவர் ரஹீம் கஸாலி பதிவுலகத்திற்குள் காலடி வைத்ததும் இந்த ஆண்டில்தான்(ஹி....ஹி.....)
பதிவு திருடர்கள் கவனத்திற்கு:
நண்பர்களே கொஞ்சம்சிரமப்பட்டு தொகுத்த பதிவு இது. தயவு செய்து சுலபமாக காப்பி& பேஸ்ட் செய்து உங்கள் தளத்தில் உங்களின் பதிவு போல இணைத்துவிட வேண்டாம்.
இந்த பதிவு காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது. மீறி யாராவது திருடினால் ஆப்புதான்.மன்னிக்கவும் காப்புதான். இதோ இதற்க்கான காப்புரிமை
Copyright :: All Rights Reserved
Registered :: Sat Jan 01 10:41:03 UTC 2011
Title :: கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் -ஒரு பார்வை
Category :: Blog
Fingerprint :: e2463f953c32f29f11c77ca6fbe28d
MCN :: EG5N6-8Y3PD-WT8EN

































