இனி அடிக்கடி வாசுவும் ராசுவும் அரசியல் நிகழ்வுகளை இங்கே பகிர்ந்து கொள்வார்கள்.
அடடே....வா வாசு எங்கே இந்த பக்கம் கொஞ்ச நாளா ஆளைக்காணோம்?
டெல்லில படிப்பு சம்பந்தமா கொஞ்சம் வேலை இருந்துச்சு ராசு .அதான் அங்கே போயிட்டு இன்னைக்கு காலைலேதான் வந்தேன்.
அப்படியா? டெல்லில என்ன விசேசம்? நம்ம சி.எம் கூட டெல்லிக்கு வந்திருந்தாரு போல?
ஆமாமாம், நேற்று வந்திருக்காருன்னு சொன்னாங்க ....
எதுக்குப்பா அங்கே போயிருப்பாரு ?இலங்கை தமிழனை காப்பாத்துறத பத்தி பேசவா?
அவரு எதுக்குப்பா இலங்கை தமிழர்களை பத்தி பேசணும். அவங்க வந்து தமிழ்நாட்டுல ஓட்டு போடப்போறாங்களா என்ன? அவங்களை காப்பாத்த?
அப்புறம் எதுக்கு போயிருப்பாரு ஒருவேளை மீனவர் பிரச்சினையை பத்தி போயிருப்பாரோ?
அட நீ வேற விளங்காதவனா இருக்கியே....அதுக்குத்தான் தந்தி அடிச்சுருவாறே?
அப்படின்னா...அதுக்கும் இல்லையா? வேறெதுக்குதான் போயிருப்பாரு?
நான் என்னவோ மன்மோகன்,சோனியா மாதிரி கேக்குறே...எனக்கு என்ன தெரியும்? எல்லாம் கூட்டனிய பத்தி பேசத்தான் போயிருப்பாரு.
ஓ...அதுக்குத்தானா? அதையும் போன்ல பேசி முடிச்சிட வேண்டியதுதானே?
அது சரிவராதே? அப்புறம் அங்கே நடந்த இன்னொரு கூத்து தெரியுமா?
சொல்லுப்பா...சொல்லுப்பா....
அங்கே போயி வாய வச்சுக்கு சும்மா இருக்காம....பாட்டாளி மக்கள் கட்சி எங்க கூட்டணியில்தான் இருக்குன்னு இவரு பாட்டுக்கு சொல்லிட்டாரு...
இதுல என்னப்பா கூத்திருக்கு?
அவசரப்படாதே....சொல்றேன்.....அவரு அப்படி சொன்னவுடனேயே ராமதாசு ரொம்ப பிகு செஞ்சுக்கிட்டு கூட்டணி பத்தி இன்னும் முடிவாகல...எல்லா கட்சியும் எங்கட்ட பேசிக்கு இருக்காங்கன்னு சொல்லிட்டாரு
அதானே....ராமதாசுதான் பெரிய வியாபாரி ஆச்சே? எங்கே பேரம் அதிகமா படியுதோ அங்கேதானே இருப்பாரு....அப்புறம் ராமதாசு இப்படி சொன்னதுல கலைஞர் மூக்கு உடைஞ்சுருக்குமே?
கலைஞர் இதைவிட கேவலத்தை எல்லாம் ராமதாசுட்ட சந்திச்சவரு இதுக்கா அசருவாரு பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.
அதுக்குத்தான் எதையுமே பிளான் பண்ணி செய்யனும்ன்னு சொல்றது.
எப்படி ஜெயலலிதா மாதிரியா?
ஜெயலலிதா அப்படி என்னப்பா பிளான்பண்ணி செஞ்சாங்க?
சமீபத்துல வேதாராண்யம் மீனவரு விஜயக்குமார இலங்கை கடற்படை நாயுங்க சுட்டு கொன்னுருச்சு தெரியமா?
ஆமாம் அதுக்கென்ன? இதுல ஜெயலலிதா பிளான் எங்கேப்பா இருக்கு. அவங்கதான் சுடசொன்னாங்களா?
அய்யய்யோ...நீ என்னப்பா எனக்கு ஆப்பு அடிச்சுருவே போல....அதுல அவங்க பிளான் என்னன்னா....தேர்தல் வருது தெரியும்ல....அதான் வேதாரன்யத்துக்கே நேராப்போயி ஆறுதல் சொன்னாங்க....அதாவது மக்கள்ட்ட நல்ல பேரு எடுத்து ஆட்சிய பிடிச்சிடலாம்ன்னு பிளான்...
இருக்காதுப்பா...அதான் செத்துப்போன மீனவரு விஜயகுமாரு அவங்க கட்சி காரருன்னு சொல்லிட்டாங்களே?
அது உண்மைதான். அப்படி பார்த்தா, நடிகர் ராமராஜன் கட்சிக்காக ஊரு ஊரா போயி கூட்டம் போட்டவாறு. தீவிர ஆதரவாளரு, அவரு அடிபட்டு மதுரையில அவரு அண்ணன் வீட்டுல இருக்காரு...வேதாரண்யத்துக்கு போயிட்டு அப்படியே இந்தம்மா அவர பாக்க வரும்ன்னு அவரு குடும்பத்துக்காரங்க எதிர்பார்த்தாங்கலாம். போகலியே இந்தம்மா....
சரி அத விடு....இந்தம்மா ஆட்சியில ஒருநாள் முதல்வர் மாதிரி ஒரு வாரம் மந்திரியா இருந்தவரு ஆலங்குடி வெங்கடாச்சலம். இவர மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு குரூப்பு வெட்டி கொன்னுடுச்சு அவரு குடும்பத்துக்கு ஆறுதலு சொல்ல போகலியே இந்தம்மா...
இப்பவும் தேர்தல் வரலேன்னா இந்தம்மா வேதாரண்யம் எந்த திசையில இருக்குன்னு கேட்டுருப்பாங்க .
அடேங்கப்பா...இவ்வளவு இருக்கா....நீ சரியான மூளைக்காரன்ப்பா...உனக்கு இருக்க மூளைக்கு நீ இங்கே படிக்க வேண்டிய ஆளே இல்லப்பா.அமெரிக்காவுல படிக்க வேண்டிய ஆளு?
எதுக்கு நானும் காலுல ஜி.பி.எஸ். மாட்டிக்கு அலையவா?
அது என்னப்பா ஜி.பி.எஸ்.
ஜி.பி.எஸ் ன்னா ஒரு ஆளு இருக்க இடத்தை கண்டிபிக்க உதவும் கருவி.விலங்குக நடவடிக்கைய கவனிக்க அதுக காலில இதைத்தான் மாட்டிவிடுவாங்க.அதுக்கு எலக்ட்ரானிக் டேக்குன்னு பேரு
அப்படியா அதுக்கும் மனுசனுக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கு இந்த படத்த பாரு புரியும்.
என்னப்பா இது மனுஷங்க காலில மாட்டியிருக்கு எதுக்குஇப்படி மாட்டிக்கு அலையுறாங்க இது இப்ப வந்துருக்க ஒரு ஸ்டெயிலா?
நல்லா கேட்ட போ.....இது அவங்களா மாட்டிக்கலப்பா....மாட்டிவிட்டுட்டாங்க...
மாட்டிவிட்டுட்டான்களா? யாருப்பா இத பண்ணினது?
இப்ப அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக் கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில் கட்டி அவங்க நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருது
அடக்கொடுமையே அவன் நாட்டுக்காரன் நம்ம நாட்டுக்கு வந்தா அவன் காலு தரையில படக்கூடாதுன்னு நம்மாளுங்க சிவப்பு கம்பளம் போடுறாங்க.... அவங்க என்னடான்னா இப்படி பண்றாங்களா? கொடுமையா இருக்கே?
அட இது நமக்கு ஒன்னும் புதுசில்லப்பா. இதுக்கு முன்னாடி வாஜ்பாயி ஆட்சியில மந்திரியா இருந்த ஜார்ஜ் பெர்ணண்டாசுன்னு ஒருத்தர அமெரிக்கா ஏர்போர்ட்டுல அவுத்து பாத்தானுங்க...அப்புறம் அத்வானி, ஷாருக் கானுக்கெல்லாம் இந்த மாதிரி கேவலம் நடந்துருக்குப்பா?
இத நம்ம அரசாங்கம் தட்டி கேக்காதா?
அவங்க சும்மா கொரலு கொடுக்கறமாதிரி கொடுத்துட்டு ஒபாமாவுக்கு கால் கழுவி விடற வேலைய பாக்க ஆரம்பிச்சுடுவாங்க...
சரி நீதான் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேல....அதுலயாவது இத பத்தி எழுதுப்பா...
எழுதிட்டா போச்சு
வலைப்பதிவுன்னதும் ஞாபகத்துக்கு இப்போ மீனவருக்காக என்னவோ பண்ணிட்டு இருக்காங்களாமே?
ஆமாப்பா... மீனவருக்காக டிவிட்டர்ல பெரிய புரட்சி ஒன்னு உருவாகி தினமும் ஆயிரக்கணக்குல ட்வீட் வந்துக்கு இருக்கு.அரசாங்கம் காதுக்கு அது எட்டி இனிமேலாவது இதுக்கு ஓட்டுப்பொறுக்கி ஆட்சியாளர்கள் எதாவது ஆக்சன் எடுக்கறாங்கலான்னு பாப்போம்
நல்லதுப்பா...உன்கிட்ட பேசுனதுல நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன்.அடிக்கடி வாப்பா.
இத படிக்கறவங்க என்ன எப்படி வரவேற்கறாங்கன்னு தெரிஞ்சுக்குத்தான் நான் அடிக்கடி வர்றதும், வராததும் இருக்கு...
அப்படியா, அவங்க உன்னை வரவேற்க்கிற விஷயத்த நீ எப்படி தெரிஞ்சுக்குவே?
எல்லாம் இந்த பதிவுக்கு விழற ஓட்டையும் பின்னூட்டத்தையும் வச்சுத்தான். சரி கிளம்பறேன்.














































