ஞாயிறு, 13 மார்ச், 2011

பதிவர்களின் ஆதரவு எந்த கட்சிக்கு? -பரபரப்பு சர்வே முடிவுகள்.


கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக என் வலைத்தளத்தில் வலது பக்கம்,
நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும்?
என்ற தலைப்பிட்டு ஒரு விட்கேட் வைத்திருந்தேன்.
அதில் இதுவரை பதிவான வாக்குகள்: 1038
அதில்



அண்ணா.தி.மு.க கூட்டணி=  651 வாக்குகள் பெற்று,  62% சதவீதமும் 

தி.மு.க.கூட்டணி= 342  வாக்குகள்பெற்று , 32% சதவீதமும்

மூன்றாவது அணி= 45 வாக்குகள் பெற்று, 4% சதவீதமும்

பெற்றுள்ளது.

எனவே  அண்ணா தி.மு.க கூட்டணி:  651 (62%)வாக்குகள் பெற்று பதிவர்களிடையே   முன்னணியில் இருக்கிறது.


டிஸ்கி: இதை நாங்கள் ஒத்துக்கொள்ள முடியாது....இந்த வாக்குப்பதிவில் கலந்து கொண்ட பதிவர்கள் எல்லோரும் வாக்குப்பதிவு நடக்கும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது....பலர் வெளிநாட்டில் இருக்கலாம். அவர்களா வந்து வாக்களிக்க போகிறார்கள் என்று சொல்லும் நண்பர்களுக்கு என் பதில் ஹி...ஹி.....




 நேற்று படிக்காமல் தவறவிட்டவர்களுக்காக...........

50 கருத்துகள்:

  1. ....பலர் வெளிநாட்டில் இருக்கலாம். அவர்களா வந்து வாக்களிக்க போகிறார்கள் என்று சொல்லும் நண்பர்களுக்கு என் பதில் ஹி...ஹி.....//

    இந்த கேள்வியில் அர்த்தமில்லை.. இந்த தேர்தல் முதல் வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்கலாம்! அதற்க்கான உத்தரவு அனைத்து தூதரகத்துக்கும் வந்துள்ளது.. இன்னும் சரியான தகவல்கள் தெரியவில்லை தரிந்தவுடன் இன்னும் சொல்கிறேன்! யாருக்கேனும் தெரித்தால் சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  2. அட்டகாசமான டைட்டில்.. ஆனால் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  3. செய்தியில் சூடு கம்மியா இருக்கிற மாதிரி தோணுது.(ஹிஹி....ஹிஹி)

    பதிலளிநீக்கு
  4. நடுநிலையான சர்வே முடிவுகள்!

    பதிலளிநீக்கு
  5. //Days left to vote : 49//

    இது என்னா தல? ஒரே குழப்பமா இருக்கே... ரிசல்ட் வர்ற தேதி வரைக்கும் கணக்குல எடுத்துட்டீங்களோ? அப்டின்னா, இந்த வாக்கெடுப்பு தப்பு.. வாக்கெடுப்பு நடக்கற தேதி வரைக்கும் தான் தேதி தரணும்னு நினைக்கிறேன்...

    பார்த்து பண்ணுங்க தல...

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம்....நடத்துங்க உங்க கருத்துகணிப்ப......

    பதிலளிநீக்கு
  7. சி.பி.செந்தில்குமார் said... 2 அட்டகாசமான டைட்டில்.. ஆனால் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்/////
    நான் என்ன வச்சுக்கா வஞ்சகம் பண்றேன்?

    பதிலளிநீக்கு
  8. வைகை said... 3
    இந்த கேள்வியில் அர்த்தமில்லை.. இந்த தேர்தல் முதல் வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்கலாம்! அதற்க்கான உத்தரவு அனைத்து தூதரகத்துக்கும் வந்துள்ளது.. இன்னும் சரியான தகவல்கள் தெரியவில்லை தரிந்தவுடன் இன்னும் சொல்கிறேன்! யாருக்கேனும் தெரித்தால் சொல்லுங்கள்!////


    அது இன்னும் அறிவிப்பாகவே இருக்கிறது.நடைமுறைக்கு வரல...அப்படியே வந்தாலும் வெளிநாட்டில் இருக்கும் எல்லா இந்தியர்களும் வாக்களிப்பார்கள் என்று சொல்லமுடியாது....
    இங்கு..பக்கத்து தெருவில் இருக்கும் வாக்குசாவடிக்கே போக யோசிக்கும் நம்மவர்கள் வெளிநாட்டிலா போடா போகிறார்கள்

    பதிலளிநீக்கு
  9. rajatheking said... 4 Reall result um ethan varum. .. ADMK top uDMK Ku ஆப்பு
    அதற்கிடையில் அவசரப்பட்டா எப்படி? காத்திருங்கள்

    பதிலளிநீக்கு
  10. தமிழ் 007 said... 5 செய்தியில் சூடு கம்மியா இருக்கிற மாதிரி தோணுது.(ஹிஹி....ஹிஹி)
    இனிமேத்தான் சூடு பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  11. செங்கோவி said... 7 தமிழ்மணத்தைக் காணோம்...
    அதான் புரியல....

    பதிலளிநீக்கு
  12. செங்கோவி said... 6 நடுநிலையான சர்வே முடிவுகள்!
    வருகைக்கு நன்றி செங்கோவி

    பதிலளிநீக்கு
  13. இது என்னா தல? ஒரே குழப்பமா இருக்கே... ரிசல்ட் வர்ற தேதி வரைக்கும் கணக்குல எடுத்துட்டீங்களோ? அப்டின்னா, இந்த வாக்கெடுப்பு தப்பு.. வாக்கெடுப்பு நடக்கற தேதி வரைக்கும் தான் தேதி தரணும்னு நினைக்கிறேன்...
    பார்த்து பண்ணுங்க தல...

    வாக்கெடுப்பு நெருக்கத்தில் கணிப்பு விட தேர்தல் கமிசன் தடை போட்டிருக்கு அதான் கொஞ்சம் அட்வான்சாவே....ஹி...ஹி...

    பதிலளிநீக்கு
  14. Pari T Moorthy said... 9 ம்ம்ம்....நடத்துங்க உங்க கருத்துகணிப்ப......
    நடத்திக்கே இருக்கோம்

    பதிலளிநீக்கு
  15. அடுத்த முதல்வர் அம்மாவாக இருக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது...

    பதிலளிநீக்கு
  16. இன்னும் நாள் இருக்கிறது, எனவே அந்த விட்ஜெட்டை தொடர்ந்து வைத்திருங்கள், பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  17. பதிவர்களின் வாக்குகள் உண்மையான தேர்தலை எத்தனை சதவீதம் பிரதிபலிக்கும் என்று தெரியவில்லை. கருத்துக்கணிப்புகளே பொய்க்கின்றன.

    பதிலளிநீக்கு
  18. சங்கவி said... 18 அடுத்த முதல்வர் அம்மாவாக இருக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது...
    அப்படித்தான் அண்ணா தி.மு.க. அபிமானிகள் சொல்கிறீர்கள்.மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  19. பன்னிக்குட்டி ராம்சாமி said... 19

    பதிவர்களின் வாக்குகள் உண்மையான தேர்தலை எத்தனை சதவீதம் பிரதிபலிக்கும் என்று தெரியவில்லை. கருத்துக்கணிப்புகளே பொய்க்கின்றன.
    பிரதிபலிக்க பத்து சதவிகிதம்தான் வாய்ப்புண்டு....நிறைய பதிவர்கள் வெளிநாட்டிலிருந்து எழுதுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  20. விக்கி உலகம் said... 21 பகிர்வுக்கு நன்றி
    வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  21. பன்னிக்குட்டி ராம்சாமி said... 20

    இன்னும் நாள் இருக்கிறது, எனவே அந்த விட்ஜெட்டை தொடர்ந்து வைத்திருங்கள், பார்ப்போம்!////
    தேர்தல் முடியும் வரை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்போதுதானே ஒப்பிட்டு பார்க்கலாம்

    பதிலளிநீக்கு
  22. இதையெல்லாம் ஆதாரமாக வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாதுதான். ஆனால் நடந்தால் நல்லதுதான்!

    பதிலளிநீக்கு
  23. என் வயித்துல பாலை வார்த்தீங்க போங்க.நம்ம வலைப்பதிவர்கள் ராசி பத்தி வலையுலகமே நன்கு அறியுமே:-))

    பதிலளிநீக்கு
  24. யாரு ஆட்சிக்கு வந்தா என்ன? நாடு உருபடவா போகுது?

    பதிலளிநீக்கு
  25. நான் கூ் ஆட்சி மாற்றத்தை எதிர் பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு
  26. அப்படியா சொல்றீங்க..

    சரி பார்ப்போம்..

    பதிலளிநீக்கு
  27. .பலர் வெளிநாட்டில் இருக்கலாம். அவர்களா வந்து வாக்களிக்க போகிறார்கள் என்று சொல்லும் நண்பர்களுக்கு என் பதில் ஹி...ஹி.....//

    இந்த கேள்வியில் அர்த்தமில்லை.. இந்த தேர்தல் முதல் வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்கலாம்! அதற்க்கான உத்தரவு அனைத்து தூதரகத்துக்கும் வந்துள்ளது.. இன்னும் சரியான தகவல்கள்

    பதிலளிநீக்கு
  28. தமிழ்நாட்டு மக்களின் எண்ணமும் இப்போ அதுதான்

    பதிலளிநீக்கு
  29. இந்த தேர்தலில் விளையாடப்போவது அரசு ஊழியர்களின் ஒட்டுதான். அதை இதில் சேர்த்தி கிடையாது

    பதிலளிநீக்கு
  30. அ.தி.மு.க வுக்கு சப்போர்ட்டா ரஹீம் கஸாலி பிளாக்ல ஒரு பதிவு ம்..ஒத்துக்கிட்டாரு

    பதிலளிநீக்கு
  31. நானே இதுல பத்து ஓட்டு போட்ருக்கேன் ஹஹா

    பதிலளிநீக்கு
  32. பொதுவாக ஊடகங்களில் ஆளுங்கட்சிக்கு எதிரான பார்வைதான் அதிகமாக இருக்கும், வலையுலகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
    # அநியாயத்தை கண்டா பொங்குறது.

    பதிலளிநீக்கு
  33. N.H.பிரசாத் said... 29 யாரு ஆட்சிக்கு வந்தா என்ன? நாடு உருபடவா போகுது?///
    அப்படி சொல்லுங்க பிரசாத்

    பதிலளிநீக்கு
  34. அபி அப்பா said... 30 என் வயித்துல பாலை வார்த்தீங்க போங்க.நம்ம வலைப்பதிவர்கள் ராசி பத்தி வலையுலகமே நன்கு அறியுமே:-))
    அப்படியா இது நமக்கு தெரியாம போச்சே?

    பதிலளிநீக்கு
  35. Prakash said... 31Definitely DMK will win this election.////
    பார்க்கலாம் உங்கள் கணிப்பு எப்படின்னு....

    பதிலளிநீக்கு
  36. # கவிதை வீதி # சௌந்தர் said... 32

    அப்படியா சொல்றீங்க..

    சரி பார்ப்போம்.////
    பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  37. # கவிதை வீதி # சௌந்தர் said... 33

    நான் கூ் ஆட்சி மாற்றத்தை எதிர் பார்க்கிறேன்..////
    பதிவர்களெல்லாம் ஒரு குருப்பா இருக்கீங்க போல

    பதிலளிநீக்கு
  38. போளூர் தயாநிதி said... 34

    .பலர் வெளிநாட்டில் இருக்கலாம். அவர்களா வந்து வாக்களிக்க போகிறார்கள் என்று சொல்லும் நண்பர்களுக்கு என் பதில் ஹி...ஹி.....//

    இந்த கேள்வியில் அர்த்தமில்லை.. இந்த தேர்தல் முதல் வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்கலாம்! அதற்க்கான உத்தரவு அனைத்து தூதரகத்துக்கும் வந்துள்ளது.. இன்னும் சரியான தகவல்கள்////
    வைகைக்கான என் பதில் பின்னூட்டத்தை பாருங்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  39. அசோக்.S said... 35 தமிழ்நாட்டு மக்களின் எண்ணமும் இப்போ அதுதான்///
    அதை இப்பவே சொன்னா எப்படி நண்பரே?

    பதிலளிநீக்கு
  40. பாலா said... 36 இந்த தேர்தலில் விளையாடப்போவது அரசு ஊழியர்களின் ஒட்டுதான். அதை இதில் சேர்த்தி கிடையாது////
    பதிவர்களில் அரசு ஊழியர்கள் கிடையாது போல...

    பதிலளிநீக்கு
  41. ஆர்.கே.சதீஷ்குமார் said... 37 நானே இதுல பத்து ஓட்டு போட்ருக்கேன் ஹஹா///
    இதிலும் கள்ள வோட்டா? அப்படின்னா கள்ள வோட்டு போட்டத்தான் அண்ணா தி.மு.க ஜெயிக்கும்ன்னு சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  42. ஆர்.கே.சதீஷ்குமார் said... 38 அ.தி.மு.க வுக்கு சப்போர்ட்டா ரஹீம் கஸாலி பிளாக்ல ஒரு பதிவு ம்..ஒத்துக்கிட்டாரு///
    நானெங்கே ஒத்துக்கிட்டேன்?. நீங்கதான் ஒத்துக்கிட்டீங்க, கள்ளவோட்டு போட்டேன்னு....

    பதிலளிநீக்கு
  43. பாரத்... பாரதி... said... 40 யாருங்க அந்த மூன்றாவது அணி?
    இன்னும் ஓரிரு நாளில் தெரியும்....

    பதிலளிநீக்கு
  44. பாரத்... பாரதி... said... 41 பொதுவாக ஊடகங்களில் ஆளுங்கட்சிக்கு எதிரான பார்வைதான் அதிகமாக இருக்கும், வலையுலகமும் அதற்கு விதிவிலக்கல்ல.

    தவறிருந்தால் சுட்டிக்காட்டலாம்.அதேநேரம் ஜெயலலிதா செய்யாத தவறா?

    பதிலளிநீக்கு